தடுப்பூசி போட்டுக்கொண்ட பணியாளர்களுக்கு இந்த சிறப்பு சலுகை: ஜேர்மன் பல்பொருள் அங்காடி அறிவிப்பு
தடுப்பூசி போட்டுக்கொண்ட பணியாளர்களுக்கு போனஸ் வழங்க இருப்பதாக ஜேர்மன் பல்பொருள் அங்காடி ஒன்று அறிவித்துள்ளது.
ஏற்கனவே, அமெரிக்காவில் பல பல்பொருள் அங்காடிகள் தடுப்பூசி போட்டுக்கொண்ட தங்கள் பணியாளர்களுக்கு பரிசாக பணம் கொடுப்பதாக அறிவித்து அதை நடைமுறைப்படுத்தியும் வருகின்றன.
தற்போது, அதே நடைமுறை ஜேர்மனிக்கும் வந்துள்ளது. ஆனால், தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்குவதாக அறிவித்தும், அவர்களை வேலைக்கு வரவழைப்பது பெரிய தலைவலியாக இருப்பதாக பல்பொருள் அங்காடிகள் தெரிவித்துள்ளன.
Edeka Nord என்னும் பல்பொருள் அங்காடி, தடுப்பூசி போட்டுக்கொண்ட தனது பணியாளர்களுக்கு 50 யூரோக்கள் போனசாக வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால், இப்படி தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது சட்டப்படி சரியா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளதை மறுப்பதற்கில்லை.