ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக ஜேர்மன் ராணுவ வீரர் மீது குற்றச்சாட்டு
ஜேர்மன் ராணுவ வீரர் ஒருவர் ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஜேர்மன் பெடரல் அரசு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்கள்.
ராணுவ வீரர்
ஜேர்மன் ஆயுதங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் பெடரல் அலுவலகத்தில் பணியாற்றிவந்த அந்த ராணுவ வீரர், தனது பணிக்காலத்தின்போது ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஜேர்மனியின் Bonn நகரிலுள்ள ரஷ்ய துணை தூதரகத்துக்கும், பெர்லினிலுள்ள ரஷ்ய தூதரகத்துக்கும் சென்ற அந்த ஜேர்மன் ராணுவ வீரர், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தானாகவே முன்வந்து தெரிவித்துள்ளார்.
காவலில்
Koblenz நகரிலுள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தை சோதனையிட்ட அதிகாரிகள் அவரைக் கைது செய்தார்கள். கைது செய்யப்பட்ட அந்த ராணுவ வீரர், கடந்த ஆகத்து மாதம் முதல் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஜேர்மன் பெடரல் அரசு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்கள்.