ஜேர்மனியின் முக்கிய 2 மாநிலங்களில் திங்கட்கிழமை முதல் கூடுதலாக கடுமையான நடவடிக்கை அமுல்! வெளியான முக்கிய அறிவிப்பு
ஜேர்மனியின் முக்கிய இரண்டு மாநிலங்களில் திங்கட்கிழமை முதல் கூடுதலாக புதிய கடுமையான நடவடிக்கை அமலுக்கு வருகிறது.
தென்மேற்கில் Baden-Württemberg மற்றும் வடக்கில் Mecklenburg-West Pomerania ஆகிய இரண்டு ஜேர்மன் மாநிலங்கள் திங்கட்கிழமை முதல் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை விதிக்க முடிவு செய்துள்ளன.
வடக்கில் பெரும்பாலான கடைகள் மற்றும் பள்ளிகள் மூடப்படும், சிகையலங்கார கடைகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அவசரகால நடவடிக்கை அமுல்படுத்த மத்திய அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டத்தை ஜேர்மனி நிறைவேற்றுகிறது, ஆனால் அது அடுத்த வாரத்தின் பிற்பகுதி வரை இது நடக்காது என கூறப்படுகிறது.
அதேசமயம், 66 வயதான ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் இன்று ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.