17 ஆண்டுகளுக்கு முன் மாயமான ஜேர்மன் இளம்பெண்: தற்போது ஒருவர் கைது
ஜேர்மன் பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவில் மாயமான வழக்கில், சுமார் 17 வருடங்கள் கழித்து தற்போது ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மாயமான ஜேர்மன் இளம்பெண்
2005 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள Lismore நகரில், தன் நண்பர்களுடன் இரவில் வெளியே சென்றிருந்த Simone Strobel (25) என்னும் ஜேர்மன் இளம்பெண், மர்மமான முறையில் மாயமானார். அவர் பவேரியாவிலுள்ள Würzburg நகரைச் சேர்ந்தவர் ஆவார்.
ஆறு நாட்களுக்குப் பிறகு, சற்று தொலைவில் அமைந்திருந்த விளையாட்டு வளாகம் ஒன்றில், பனை ஓலைகளின் கீழ் அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 17 ஆண்டுகளாக அந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை.
Homicide Arrest
— WA Police Force (@WA_Police) July 26, 2022
A man has been arrested in WA following an extensive investigation into the homicide of German backpacker Simone Strobel, in NSW more than 15 years ago.
WATCH the arrest here: https://t.co/eskUZr0X98 pic.twitter.com/AHDHMRnlCL
தற்போது ஒருவர் கைது
இந்நிலையில், கடந்த செவ்வாயன்று, Simone கொலை வழக்கு தொடர்பாக 42 வயது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
2020ஆம் ஆண்டு, அவுஸ்திரேலிய அதிகாரிகள், Simone மரணம் தொடர்பாக துப்புக் கொடுப்பவர்களுக்கு ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் வாங்குவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த கைது சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |