ஜேர்மன் பொதுத் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பே தொலைக்காட்சியில் தேர்தல் முடிவுகள் வெளியானதால் பரபரப்பு!
ஜேர்மனியின் ARD சேனலில் திடீரென பொதுத்தேர்தல் முடிவுகள் ஒளிபரப்பானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் நாளை செப்டம்பர் 26ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இந்நிலைியில், செப்டம்பர் 24ம் திகதி வெள்ளிக்கிழமை ARD சேனலில் வினாடி வினா நிகழச்சி ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.
அப்போது திடீரென திரையின் கீழ்ப்பகுதியில் பொதுத்தேர்தல் முடிவுகளை காட்டும் பேனர் தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பேனரில், ஜேர்மன் பொதுத் தேர்தலில் யூனியன் கட்சிகள் 22.1%, சமூக ஜனநாயக கட்சி 22.7%, the Alternative for Germany 10.5% மற்றும் சுதந்திர ஜனநாயக கட்சி 13.2% வாக்குகளை பெறும் என காண்பித்தது.
Left மற்றும் Greens கட்சிகளுக்கான முடிவுகள் காண்பிக்கப்படுவதற்கு முன்பு ARD சேனல் பேனரை எடுத்துவிட்டது.
தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் திடீரென ARD சேனலில் தேர்தல் முடிவுகள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.
Heute ist Freitag, der 24.09.2021. Müssen wir beunruhigt sein, wenn bei #gefragtgejagt in der #ARD bereits Hochrechnungen zur Bundestagswahl durchs Bild laufen? 🤔
— Der Online-Wunschbrunnen (@_wunschbrunnen) September 24, 2021
Wissen die schon wieder mehr als wir? 🤫 pic.twitter.com/4YkYg5hTah
இதுகுறித்து விளக்கமளித்த ARD சேனலில் தலைவர் Holger Lichtenthäler, இது ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கான தொழில்நுட்ப முன்னோட்ட சோதனை.
இந்த சோதனை நேரலையில் இல்லாமல் தனியாக நடத்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால் தவறுதலாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டு விட்டது.
தெரியாத்தனமாக இது நடநத்துவிட்டது, இதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம் என தெரிவித்துள்ளார்.