வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற ஜேர்மானியர் சுட்டுக் கொலை: விவரம் செய்திக்குள்...
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுலா சென்ற ஜேர்மானியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தென்னாப்பிரிக்காவுக்கு வருவாயைக் கொண்டு வரும் முக்கிய விடயங்களில் சுற்றுலாவும் ஒன்று ஆகும்.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுலா சென்ற ஜேர்மானியர்களில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அழகான இயற்கைச் சூழலும், வகை வகையான வனவிலங்குகளும் கொண்ட தென்னாப்பிரிக்காவுக்கு ஆண்டுதோறும் ஜேர்மானியர்கள் பலர் சுற்றுலா செல்வதுண்டு.
அவ்வகையில், சமீபத்தில் நான்கு ஜேர்மானியர்கள் தென்னாப்பிரிக்காவிலுள்ள Kruger தேசிய பூங்காவை பார்வையிடுவதற்காக கார் ஒன்றில் சென்றுள்ளார்கள்.
அப்போது, திடீரென ஆயுதம் ஏந்திய சிலர் காரை வழிமறித்து, கண்ணாடியை இறக்கும்படி கூற, வண்டியின் சாரதி, உடனே கதவுகளை பூட்டியிருக்கிறார்.
கோபத்தில் கண்ணாடி வழியாகவே அவரை சுட்ட அந்த நபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். அந்த ஜேர்மானியர் அங்கேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விடயம் தென்னாப்பிரிக்காவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்க சுற்றுலாத்துறை அமைச்சரான Lindiwe Sisulu, இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளதுடன், உயிரிழந்த ஜேர்மானியர் குடும்பத்துக்கு தனது இரங்கலையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க சுற்றுலாத்துறை அமைச்சரான Lindiwe Sisulu, இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளதுடன், உயிரிழந்த ஜேர்மானியர் குடும்பத்துக்கு தனது இரங்கலையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா எந்த அளவுக்கு அழகான இயற்கைச் சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் பெயர் பெற்றதோ, அதேபோல, அங்கு வேலையில்லாத்திண்டாட்டமும் அதிக அளவில் உள்ளதுடன், பொருளாதார சமநிலையின்மையும் அங்கு பெருமளவில் காணப்படுகிறது. அதாவது, செல்வந்தர்கள் செல்வந்தர்களாகிக்கொண்டே செல்ல ஏழைகளோ, ஏழையாகிக்கொண்டே செல்கிறார்கள். விளைவு வன்முறை!