ஜேர்மனியில் நாளையும் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள தொழிலாளர் யூனியன்
ஜேர்மனியில், ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தும், எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், நாளையும் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது தொழிலாளர் யூனியன் ஒன்று.
நாளையும் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு
ஜேர்மனியின் மிகப்பெரிய தொழிலாளர் யூனியன்களில் ஒன்றான Verdi, நாளையும், அதாவது, மார்ச் 14, வியாழக்கிழமையும், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு விமான நிலைய ஊழியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
நாளை, முழு நாளும் வேலைநிறுத்தம் இருக்கும் என Verdi அறிவித்துள்ளதால், பயணிகள் அவஸ்தைக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
Image: Ulrich Perrey/dpa/picture alliance
என்றாலும், எப்போதும் பரபரப்பாக காணப்படும் Frankfurt மற்றும் Munich விமான நிலைய ஊழியர்கள் மட்டும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை என்பதால், அந்த விமான நிலையங்களைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு பாதிப்பு எதுவும் இருக்காது.
ஊதிய உயர்வு, போனஸ் மற்றும் ஓவர்டைம் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து விமான நிலைய ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள் முதலானோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |