ஜேர்மனி ரயில் சாரதிகள் வேலை நிறுத்தம்: கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து
ஜேர்மனியில், நேற்று முதல் ரயில் சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெர்லின், Leipzig மற்றும் Dresden ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மக்களில் பலர் இந்த வேலை நிறுத்தத்தால் கடுமையாக எரிச்சலடைந்துள்ளார்கள். இப்போதுதான் சுற்றுலா மீண்டும் துவங்கும் நிலையில், இந்த வேலை நிறுத்தம் தவறாண நேரத்தில் செய்யப்படுகிறது என்கிறார் பாதிக்கப்பட்ட ஒருவர்.
அதே நேரத்தில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது சிலர் இரக்கம் காட்டுவதையும் சமீபத்திய ஆய்வு ஒன்று காட்டுகிறது. சுமார் 31 சதவிகிதம் மக்கள் வேலை நிறுத்தம் செய்வோரை ஆதரிக்கிறார்கள்.
ரயில் சாரதிகள் யூனியனைச் சேர்ந்தவர்கள், கூடுதல் ஊதியம் வேண்டும், சற்று சிறந்த வேலைச் சூழல் வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த வேலை நிறுத்தம், வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.