யூரோ கால்பந்து... ஜேர்மனியிடம் தொடர்ந்து அடி வாங்கும் போர்ச்சுக்கல்! அபார வெற்றி: போராடிய ரொனால்டோ
யூரோ கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டத்தில், போர்ச்சுக்கல் அணியை ஜேர்மனி 4-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
ஐரோப்பிய நாடுகளில் யூரோ கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. அதன் படி குரூப் F-ல் இருக்கும் ஜேர்மனி மற்றும் போர்ச்சுக்கல் அணி இன்று மோதின. இந்த போட்டி ஜேர்மனியில் இருக்கும் Allianz Arena-வில் நடைபெற்றது.
ஏற்கனவே முக்கியமான கால்பந்து தொடர்களின் ஜேர்மனியிடம் போர்ச்சுக்கல் தொடர்ந்து அடி வாங்கி வருவதால், இன்றைய போட்டியில் அதற்கு முற்று புள்ளி வைத்து பதிலடி கொடுக்கும்,
இதனால் போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே ஜேர்மனி ஆதிக்கத்தை செலுத்தியது. குறிப்பாக போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் ஆன, கிறிஸ்டியன் ரொனால்டோவை சுற்றி வளைத்தே, ஜேர்மனி வீரர்கள் விளையாடினர். இருப்பினும் ரொனால்டோ தன்னுடைய அணிக்காக ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் ஒரு அற்புதமான கோலை அடித்தார்.
அதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில், போர்ச்சுக்கல் வீரர் ruben dias-ஆல் ஜேர்மனிக்கு ஓன் கோல் கிடைக்க, அதே போன்று 39-வது நிமிடத்தில் Raphaël Guerreiro-வும் ஓன் கோல் அடிக்க, இதனால் ஜெர்மனி 2-1 என்று முன்னிலை வகித்தது.
அதன் பின் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் ஜேர்மனி வீரர் Kai Havertz அற்புதமாக கோல் அடிக்க, ஜேர்மனி 3-1 என்றும், 60-வது நிமிடத்தில் Robin Gosens ஒரு கோல் அடிக்க ஜேர்மனி 4-1 என்று எட்ட முடியாத இடத்திற்கு சென்றது.
இருப்பினும் கடைசி கட்டத்தில் போர்ச்சுக்கல் அணிக்கு கோல் அடிக்க ரொனால்டோ போராடிக் கொண்டிருக்க, 60-வது நிமிடத்தில், Diogo Jota ஒரு கோல் அடிக்க, ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
இதில் ஜேர்மனி அணி 4-2 என்று இருந்தால், நேரத்தை மட்டும் கடத்தினால் போதும் என்ற வகையில், ஒரு தெளிவான ஆட்டத்தை கொடுக்க, இறுதியில் ஜேர்மனி 4-2 என்று வென்றது
இந்த தோல்வியின் மூலம் கடந்த 2006, 2008, 2012, 2014 என ஜேர்மனியுடன் முக்கியமான கால்பந்து போட்டிகளில் போர்ச்சுகல் 5-வது தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.