இஸ்ரேலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ஜேர்மன் இளம்பெண் உயிருடன் இருப்பதாக பரபரப்பு தகவல்
கடந்த சனிக்கிழமை, இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியது. இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த இளம்பெண்கள், இளைஞர்கள் தாக்குதலுக்குள்ளானதில், சுமார் 260 பேர் கொல்லப்பட்டனர்.
கொடூர தாக்குதல் நடத்திக் கொலை செய்தும் திருப்தியடையாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர், அங்கிருந்த பலரைக் கடத்திச் சென்றனர்.
அப்படி கடத்திச் செல்லப்பட்டவர்களில் ஒருவர் ஷானி லூக் (Shani Louk, 22) என்னும் இளம்பெண். ஷானியை தாக்கி, அரை நிர்வாணமாக்கி, ட்ரக் ஒன்றின் பின்னால் போட்டு, அவள் உடல் மீது காலைப் போட்டவண்ணம் ஊர்வலமாக கொண்டு சென்றனர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரில் சிலர்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்
ஜேர்மன் இஸ்ரேலிய பெண்ணான ஷானியின் உடலையாவது மீட்டுத் தருமாறு ஜேர்மன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார் ஷானியுடைய தாயாகிய Ricarda Louk.
இதற்கிடையில், ஷானியுடைய கிரெடிட் கார்டை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சிலர் பலமுறை பயன்படுத்த முயன்றது தெரியவந்ததாக தெரிவித்திருந்தார் Ricarda Louk.
இந்நிலையில், பரபரப்பை உருவாக்கும் தகவல் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார் அவர். ஆம், தன் மகள் ஷானி, காசாவில் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஷானியுடைய தாயாகிய Ricarda Louk.
தலையில் அடிபட்ட நிலையில், காசாவிலுள்ள ஒரு மருத்துவமனையில் ஷானி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் அவர்.
ஜேர்மன் அரசுக்கு கோரிக்கை
தன் மகள், தலையில் பலத்த காயத்துடன் காசாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவள் அபாய கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஷானியுடைய தாய்.
தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஷானியின் உயிருக்கு ஆபத்து என்று கூறியுள்ள ஷானியுடைய தாய், ஷானியை எப்படியாவது காசாவிலிருந்து மீட்டுக்கொண்டு வருமாறு ஜேர்மன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |