ஊருக்குள் நுழைந்த ஓநாய்... ஜேர்மனியில் பெண்ணுக்கு கிடைத்த அதிர்ச்சி
ஜேர்மனியில், பிஸியான தெரு ஒன்றிற்குள் நுழைந்த ஓநாய் ஒன்று பெண்ணொருவரைக் கடித்துவிட்டது.
பெண்ணுக்கு கிடைத்த அதிர்ச்சி
திங்கட்கிழமை மாலை, ஹாம்பர்க் நகரிலுள்ள பிஸியான தெரு ஒன்றிற்குள் ஓநாய் ஒன்று நுழைந்துள்ளது.
பெண்ணொருவர் அந்த ஓநாயைத் துரத்த முயல, அவர் மீது பாய்ந்த ஓநாய், அவரது முகத்தில் கடித்துள்ளது. அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அந்த ஓநாயை பிடித்த அதிகாரிகள், அதை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளதாகவும், அதை என்ன செய்வது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
150 ஆண்டுகளாக ஜேர்மனியில் ஓநாய் நடமாட்டம் இல்லாதிருந்த நிலையில், 1989ஆம் ஆண்டு, பெர்லின் சுவர் இடிக்கப்பட்டபிறகுதான் மீண்டும் ஓநாய்கள் ஜேர்மனிக்கு திரும்பியுள்ளன.
அதாவது, ஒரு கட்டத்தில் ஓநாய்களே இல்லை எனும் நிலை பல நாடுகளில் உருவானபோது, ஓநாய்கள் இல்லாததால் elk என்னும் மான்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது.
அந்த மான்கள் ஏராளமான புல்லை உண்ண, இயற்கை சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அந்த மான்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக, சில நாடுகள் மீண்டும் ஓநாய்களை தங்கள் காடுகளில் அறிமுகம் செய்துள்ளன.
அப்படி, 1998ஆம் ஆண்டு ஓநாய்கள் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டதற்குப் பிறகு, இப்படி ஊருக்குள் வந்து ஒருவரை ஓநாய் தாக்குவது இதுவே முதல் முறையாகும்.
விடயம் என்னவென்றால், மான்கள் எண்ணிக்கை அதிகமானதால் ஓநாய்களை அறிமுகம் செய்ய, இப்போது ஓநாய்கள் எண்ணிக்கை அதிகமாகி, அவை ஆடுகள் முதலான கால்நடைகளைக் கொல்வதைத் தடுப்பதற்காக, ஓநாய்களை வேட்டையாட ஜேர்மன் நாடாளுமன்றம் சட்டமே வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |