ஜேர்மனியில் பெண்கள் உடைமாற்றும் அறையில் சிக்கிய கமெராக்கள்! விசாரணை தொடக்கம்
ஜேர்மனியின் முன்னணி பெண்கள் ஹேண்ட்பால் அணியின் வீராங்கனைகள் பயன்படுத்திய லாக்கர் அறையில் கமெராக்கள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஜேர்மன் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக கிளப் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் கமெராக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக உயர்மட்ட பன்டெஸ்லிகாவில் விளையாடும் வீராங்கனை TuS Metzingen கூறினார்.
அதே அணியுடன் பணிபுரிந்த ஒரு நபர் தான் இந்த காரியத்தை செய்திருக்கக்கூடும் என சந்தேகத்தின்பேரில் ஒருவர் காவத்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். அந்த நபர் தற்காலிகமாக கிளப்பில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் TuS Metzingen கூறினார்.
"இதுபோன்ற ஒரு செயல் எங்களை முடக்கி வைக்க விடமாட்டோம் - மேலும் அணி உடனடியாக மீண்டும் ஹேண்ட்பால் விளையாட விரும்புகிறது" என்று அணியின் மேலாளர் ஃபெரென்க் ரோட் கூறினார்.
மேலும் "இந்த கடினமான நேரத்தில், காவல்துறை, சங்கம் மற்றும் பிற குழுக்களிடமிருந்து எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைத்தது" என்றும் அவர் தெரிவித்தார்.
பெண்களுக்கான ஹேண்ட்பால் பன்டெஸ்லிகா (Handball-Bundesliga Women) வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்ததாகவும், இந்த கண்டிக்கத்தக்க நடத்தையை நாங்கள் கடுமையான கண்டிக்கிறோம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு இதே லீக்கில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது, HL Buchholz 08-Rosengarten எணும் மற்றொரு கிளப்பில் மூன்று கமெராக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த வழக்கில் இன்னும் விசாரணைகள் நடந்து வருவதாக லீக் வியாழக்கிழமை கூறியது.