உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு ஜேர்மன் மக்கள் எதிர்ப்பு
உக்ரைனுக்கு கனரக ஆயுதங்கள் வழங்குவது தொடர்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பங்கேற்ற ஜேர்மனியர்கள் பாதி பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீது 57வது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வரும் ரஷ்யா, மற்ற நாடுகளையும் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.
அதேசமயம், ரஷ்யா தாக்குதலில் இருந்த உக்ரைனை தற்காத்துக் கொள்ள ஆயுதங்கள் தந்து உதவுமாறு மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.
ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இதனிடையே, உக்ரைனுக்கு கனரக ஆயுதங்கள் வழங்குதை ஜேர்ன் சான்சலர் ஓலாஃப் ஷோட்ஸ் தடுத்ததாக அந்நாட்டு சிறுபத்திரிகையான பில்ட் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் உக்ரைனுக்கு கனரக ஆயுதங்கள் வழங்குவது தொடர்பில், பொதுக் கருத்து ஆராய்ச்சி நிறுவனமான INSA, ஜேர்மன் மக்களிடையே கருத்து கணிப்பு நடத்தியுள்ளது.
இந்ந கருத்து கணிப்பில் பங்கேற்ற, 50 சதவித பேர் உக்ரைனுக்கு கனரக ஆயுதங்கள் வழங்குற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.43 சதவித பேர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் எந்த தடையும் இல்லை என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.