அதிகரிக்கும் பாதிப்பு... ஜேர்மன் மக்களின் மனநிலை இதுதான்
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையால், நாடு முழுவதும் ஊரடங்கை அமுலுக்கு கொண்டுவருவதை ஆதரிப்பதாக பெரும்பாலான ஜேர்மன் மக்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் ஜேர்மன் மக்கள் 53 சதவீதத்தினர் நாடு முழுவதுமான ஊரடங்கிற்கு ஆதரவளித்துள்ளனர். மேலும், 38% மக்கள் மேலதிக கட்டுப்பாடுகள் தேவை இல்லை என வாக்களித்துள்ளனர்.
நவம்பர் 30 முதல் டிசம்பர் 2ம் திகதிவரையில் 2,049 பேர் பங்கேற்ற இந்த கருத்துக்கணிப்பில், நாடு முழுமையான ஊரடங்கை ஆதரிப்பீர்களா என கேள்வி முன்வைக்கப்பட்டது. இதிலேயே 53 சதவீத மக்கள் நாடு தழுவிய ஊரடங்கு நடவடிக்கைகளை ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
மாநில வாரியாக குறிப்பிடுகையில், Thuringia மற்றும் Saxony மக்கள் மட்டும் ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த மாகாணங்களிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் என்பது மட்டுமல்ல, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சதவீதமும் குறைவு.
தற்போதைய சூழலில், கொரோனா பாதிப்பில் உலகின் முதலிடத்திற்கு ஜேர்மன் வந்துவிடும் என 58% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் 28% மக்கள், அவ்வாறான சூழல் உருவாக வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனியின் பெடரல் அரசாங்கம் மற்றும் பிராந்திய அதிகாரிகள் வியாழனன்று தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த ஒப்புக்கொண்ட நிலையில், குறித்த கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.