3.5 பில்லியன் டொலர் ஒப்பந்தம்: இஸ்ரேலின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் ஜேர்மனி
சுமார் 3.5 பில்லியன் டொலர் மதிப்பிலான இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை ஜேர்மனி வாங்கியுள்ளது.
ஜேர்மன்-இஸ்ரேல் இடையே புதிய ஒப்பந்தம்
இஸ்ரேல் விண்வெளி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தி அரோ இன்டர்செப்டர்(The Arrow 3 interceptor) வான் பாதுகாப்பு அமைப்பை சுமார் 3.5 பில்லியன் டொலருக்கு வாங்க ஜேர்மனி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தயாரிப்பான வான் பாதுகாப்பு அமைப்பை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கிய பிறகு, ஜேர்மனிக்கு 3 தி அரோ இன்டர்செப்டர் வான் பாதுகாப்பு அமைப்பை 3.5 பில்லியன் டொலருக்கு வழங்கும் மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை முன்னெடுத்து இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Twitter/@Israel_MOD
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் வியாழக்கிழமை தெரிவித்துள்ள தகவலில், இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் இஸ்ரேல் மற்றும் ஜேர்மனியின் மூத்த அதிகாரிகள் பங்கேற்பார்கள் என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாடாளுமன்றம் மற்றும் ஜேர்மனி நாடாளுமன்றம் இது குறித்த ஒப்புதலை வழங்கிய பிறகு, முழு ஒப்பந்தம் 2023ம் ஆண்டு இறுதிக்குள் கையெழுத்து போடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
PTI
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |