ஜேர்மனியின் 'அதிக ஆபத்து' பட்டியலில் இலங்கை உட்பட 7 நட்டுகள் சேர்ப்பு!
ஜேர்மனியின் அதிக ஆபத்துள்ள இடங்களின் பட்டியலில் இலங்கை உட்பட 7 நட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் சுகாதார அமைச்சகத்தின் துணை நிறுவனமான ராபர்ட் கோச் நிறுவனம் (RKI), வெள்ளிக்கிழமை கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக அதிக ஆபத்துள்ள இடங்களின் பட்டியலில் மேலும் 7 நாடுகளை சேர்த்து வெளியிட்டள்ளது.
ஜேர்மனியில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கு பொறுப்பான RKI, வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் அல்பேனியா, அஜர்பைஜான், குவாத்தமாலா, ஜப்பான், பாலஸ்தீனிய பிரதேசங்கள், செர்பியா மற்றும் இலங்கை ஆகிய ஏழு நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம், ஆகஸ்ட் 24 அன்று, கிரேக்க தீவுகளான க்ரீட் மற்றும் டினோஸ், தாய்லாந்து, வட மாசிடோனியா, மொராக்கோ மற்றும் மாண்டினீக்ரோ போன்ற பிற நாடுகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஜேர்மனியில் நுழையும்போது, கூடுதல் நுழைவு கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.
செப்டம்பர் 5, ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் இந்த முடிவு, இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து பயணிகளுக்கும் பொருந்தும்.
அவர்கள் ஜேர்மனியில் நுழைந்தவுடன் தடுப்பூசி சான்றிதழ்கள் அல்லது சோதனை முடிவுகளை வழங்க வேண்டும். மேலும், அவர்கள் ஜேர்மனிக்கு வருவதற்கு முன்பு einreiseanmeldung.de தளத்தில் பதிவு செய்ததற்கான ஆதாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.
ஜேர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 14,251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,984,353-ஆக உயர்ந்துள்ளது.