பயணிகளுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ள ஜேர்மன் விமான நிலையம்!
ஜேர்மனியில் உள்ள விமான நிலையம் ஒன்று பயணிகளை வண்ணமயமான லக்கேஜ்களை எடுத்துச் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜேர்மன் சுற்றுலாப் பயணிகள் விமான நிலையங்களுக்கு வண்ணமயமான பெட்டிகள் அல்லது லக்கேஜ்களை எடுத்துச் செல்லுமாறு Frankfurt விமான நிலைய அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வண்ணமயமான லக்கேஜ்களை எடுத்துச் செல்வது விமான நிலைய உதவியாளர்களுக்கு எளிதாகக் கண்டுபிடிக்க உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர், ஏனெனில் கருப்பு சூட்கேஸ்கள் வேறுபடுத்துவதற்கு கடினமாகவும் உள்ளது.
ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தாமஸ் கிர்னர், பயணிகள் பலரும் கருப்பு சூட்கேஸ்களுடன் பயணம் செய்வைத்தால், அவற்றை அடையாளம் காண்பதில் அதிக நேரம் எடுக்கிறது என தெரிவித்துள்ளார்.
கடந்த வாரங்களில் சூட்கேஸ்கள் குறைந்துவிட்ட போதிலும், தவறான இடத்தில் வைக்கப்பட்ட அல்லது அவற்றின் உரிமையாளர்களை சென்றடையாத சூட்கேஸ்கள் ஏகப்பட்டவை உள்ளதாக அவர் கூறினார். ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் தற்போது சுமார் 2,000 சூட்கேஸ்கள் கிடக்கின்றன, அவற்றின் இலக்கை அடைய காத்திருக்கின்றன.
இதற்கிடையில், ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தின் தலைவர் Stefan Schulte, சமீபத்திய வாரங்களில் பெரும்பாலான கருப்பு சூட்கேஸ்கள் விமான நிறுவனங்களுக்கும் லக்கேஜ்களை கையாளுபவர்களுக்கும் பலவிதமான சிரமங்களை ஏற்படுத்தியுள்ளன என்று கருத்து தெரிவித்தார்.
பயணிகள் தங்கள் சாமான்களில் தங்கள் பெயர்கள் மற்றும் முகவரிகளுடன் லேபிள்களை சேர்க்க விமான நிலையம் பரிந்துரைத்துள்ள நிலையில், பொலிஸார் அப்படி செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர், இதில் பாதுகாப்பு அபாயம் உள்ளது என்று கூறியுள்ளனர்.