ரஷ்யாவை கைகழுவுவதற்காக ஜேர்மனியுடன் கைகோர்த்துள்ள மற்றொரு நாடு
எரிவாயு தன்னிடம் இருக்கிறதென்ற கர்வத்தில் ஆட்டம் போட்ட ரஷ்யாவ எப்படியாவது கைகழுவிவிடக் காத்திருக்கின்றன மேற்கத்திய நாடுகள்.
அவ்வகையில், வேறு நாடுகளுடன் எரிவாயு தொடர்பில் ஒப்பந்தங்கள் செய்யப் புறப்பட்ட ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸிடம் சிக்கியது ஒரு நாடு.
அந்த நாட்டில் ஏராளம் எரிவாயு இருக்கிறது, ஆனால், அதை வெளியே கொண்டு வரும் அளவுக்கு போதுமான வசதி அந்நாட்டுக்கு இல்லை.
அப்படி ஒரு நாட்டை வளைத்துப்போட்டிருக்கிறார் ஷோல்ஸ்!
அந்த நாடு, ஆப்பிரிக்கா!
ஆம், 2017ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆப்பிரிக்காவின் நிலப்பரப்பில் 148.6 ட்ரில்லியன் கியூபிக் மீற்றர்கள் அளவிலான நிலத்தில் எரிவாயு மூலப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இது மொத்த உலகின் எரிவாயு மூலப்பொருட்களை விட 7 சதவிகிதம் கூடுதல் என்பது வியப்புக்குக்குரிய ஒரு விடயமாகும்!
ஆப்பிரிக்க நாடுகளுக்கு அந்த எரிவாயு மூலப்பொருட்களை எடுத்து எரிவாயு தயாரிக்கும் அளவுக்கு வசதியில்லை. இந்த தகவலை, எத்தியோப்பிய ஆற்றல் துறை அமைச்சரான Sultan Wali என்பவரே கூறியிருக்கிறார்.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதி தேவை, அப்படி ஜேர்மனி முதலான பணக்கார நாடுகள் உதவுமானால், அனைவருக்கும் இத்திட்டத்தால் நன்மை கிடைக்கும் என்கிறார் அவர்.
ஆக, ஜேர்மனிக்கு ரஷ்யாவை கைகழுவும் அதே நேரத்தில் அதற்கு எரிவாயு வேண்டும், அது ஆப்பிரிக்காவில் எக்கச்சக்கமாக இருக்கிறது...
ஆப்பிரிக்காவில் எக்கச்சக்கமாக எரிவாயு மூலங்கள் இருக்கிறது. அதை வெளியே கொண்டு வந்து எரிவாயுவாக மாற்றி ஏற்றுமதி செய்ய ஆப்பிரிக்காவுக்கு நிதி தேவை, அது ஜேர்மனியிடம் இருக்கிறது...
அப்புறம் என்ன, இரு நாடுகளும் கைகோர்த்தால், ஆப்பிரிக்கா சொல்வது போல, அது இந்த இரண்டு நாடுகளுக்கும் மட்டுமல்ல, ரஷ்யாவால் கைவிடப்பட்ட எரிவாயுத் தேவையிலிருக்கும் பல நாடுகளுக்கு நிச்சயம் உதவக்கூடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை!