ஜேர்மனி, பிரான்ஸ் முதலான நாடுகளிலிருந்து எல்லை தாண்டி சென்று பணிபுரிவோருக்கு ஒரு நல்ல செய்தி
ஜேர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு வேலைக்காக செல்பவர்கள் இரண்டு நாடுகளில் வரி செலுத்துவதைத் தவிர்க்கும் வகையில் ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ளன.
கொரோனா காலகட்டத்தின்போது, இந்த நாடுகளிலிருந்து எல்லை தாண்டி வேலைக்குச் செல்வோர் வரி செலுத்தும் இந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லாமலே தங்கள் வீடுகளிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். அவ்வகையில் வரி விதிகள் நெகிழ்த்தப்பட்டிருந்தன.
முந்தைய அறிவிப்பின்படி அந்த விதிகள் இன்றுடன் (செப்டம்பர் 30) முடிவுக்கு வரும் நிலையில், தற்போது அந்த வரி விதிகள் நெகிழ்த்தல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவை, டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மேலதிக விவரங்களுக்கு...
https://www.thelocal.de/20210929/germany-and-france-extend-covid-tax-breaks-for-cross-border-workers-2-2/