ஏஞ்சலா மேர்க்கலின் கடைசி நிமிட ஒப்புதல்! ஆயுத ஏற்றுமதியில் உச்சத்தை கண்ட ஜேர்மனி
ஏஞ்சலா மேர்க்கலின் வெளியேறும் அரசாங்கத்தால் கடைசி நிமிடங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆயுத ஒப்பந்தங்களால், ஜேர்மனியின் ஆயுத ஏற்றுமதி 2021-ஆம் ஆண்டின் சாதனை அளவை எட்டி, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நேரத்தில் அரசாங்கம் நிர்வாகத் திறனில் மட்டுமே செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏஞ்சலா மேர்க்கல் (Angela Merkel) தலைமையிலான முன்னாள் ஜேர்மன் அரசாங்கம் அதன் கடைசி 9 நாட்களில் கிட்டத்தட்ட 5 பில்லியன் யூரோக்கள் (5.6 பில்லியன் டொலர்) மதிப்புள்ள ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்தது.
இது ஜேர்மனியின் மொத்த ஆயுத ஏற்றுமதியை ஆண்டிற்கான சாதனையான 9.04 பில்லியன் யூரோக்களுக்குக் கொண்டுவந்தது என்று சட்டமியற்றுபவர்களின் கேள்விக்கு பொருளாதார அமைச்சகம் பதிலளித்துள்ளதைப் பார்த்ததாக ஜேர்மன் பத்திரிகை நிறுவனமான dpa தெரிவித்துள்ளது.
ஜேர்மன் ஆயுத ஏற்றுமதியில் எகிப்து முக்கியப் பெறுநராக இருந்துவருகிறது.
இந்த கடைசி நிமிட ஒப்பந்தங்களின் கீழ், Thyssenkrupp Marine Systems மூன்று MEKO A-200 EN போர் கப்பல்களை எகிப்துக்கு வழங்க அனுமதிக்கப்படுகிறது; Diehl Defense 16 IRIS-T SLS/SLX வான் பாதுகாப்பு அமைப்புகளை எகிப்துக்கு வழங்க அங்கீகாரம் பெற்றுள்ளது; மற்றும் ThyssenKrupp Marine Systems ஆனது சிங்கப்பூருக்கு 218 SG நீர்மூழ்கிக் கப்பலை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது.
ஜேர்மனியில் செப்டம்பர் தேர்தலைத் தொடர்ந்து, இம்மாத தொடக்கத்தில் ஒரு புதிய அரசாங்கம் ஆட்சியை பிடித்தது.
அதன்படி, ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) சான்செலராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே இந்த ஒப்பந்தங்களின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டன, இருப்பினும் ஏற்றுமதியின் மதிப்பு அப்போது தெரியவில்லை.
எகிப்துக்கான ஆயுத ஏற்றுமதி மட்டும் 4.34 பில்லியன் யூரோக்களுக்கு ஒப்பானதமாகியுள்ளது என்பது இப்போது தெளிவாகியுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் முன்னாள் சான்செலர் ஏஞ்சலா மேர்க்கெல், அப்போது துணை சான்செலராக இருந்த ஷோல்ஸுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டன.