ஒரே கொத்து, கதறிய ஏஞ்சலா மெர்கெல்! தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றபோது நடந்த வேடிக்கை சம்பவம்..
ஏஞ்சலா மெர்கெல் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றபோது, வெளிநாட்டு கிளிகளுடன் நேரத்தை செலவழித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஜேர்மனியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இன்னும் சில மணிநேரங்களில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தலின் முடிவில், தற்போதைய ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கலின் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியனுக்கு (CDU) கூட்டணியாக இருந்த சமூக ஜனநாயகவாதிள் கட்சி (Social Democratic Party of Germany-SPD) வெற்றிபெறலாம் என கருத்துக் கணிப்புகள் மற்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன் அடிப்படையில், SPD-ன் Olaf Scholz தான் ஜேர்மனியின் அடுத்த சான்செலராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Picture: Georg Wendt/AP
ஏஞ்சலா மெர்கல் பதவியிலிருந்து விலகுவதால், அவரது 16 ஆண்டு கால ஆட்சி நிறைவுக்கு வருகிறது. இருப்பினும், அவர் தனது கட்சிக்கு வாக்கு சேகரிக்க சமீப நாட்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் அவர் கடந்த வியாழக்கிழமை, 1990 முதல் அவர் போட்டியிட்டு வந்த வடகிழக்கு மாநிலமான Mecklenburg Western-Pomerania தொகுதிக்கு திடீரென சென்றிருந்தார்.
அப்போது, Marlow-வில் உள்ள பறவைகள் பூங்காவிற்கு சென்றிருந்தார். அப்போது பல வகையான பறவைகளுடன் சிறிது நேரத்தை கழித்தார்.
Picture: Georg Wendt/AP
அங்கு, அவுஸ்திரேலியாவின் லோரிகீட்ஸ் வகை கிளிகளுக்கு தனது கையால் தானியங்களை வழங்கினார். அப்போது, அந்த கிளிகள் ஏஞ்சலா மெர்கலின் தலை, தோள்பட்டை மற்றும் கைகளில் அமர்ந்துகொண்டன. அதனை ஏஞ்சலா மகிழ்ச்சியாக அனுபவித்துக்கொண்டு இருந்தார்.
அப்போது ஒரு கிளி அவரது கையில் லேசாக கடித்துள்ளது. அப்போது அவர் பயத்தில் லேசாக அலறினார், அவரது முகத்தோற்றமே முற்றிலும் மாறியது.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும், அவர் அங்கிருந்த பொதுமக்களுடன் செல்பீ எடுக்க பாஸ் கொடுத்த புகைப்படங்களும் வெளியாகின.Picture: Stefan Sauer/AP