பிரித்தானியர்கள் நாட்டிற்குள் நுழைய தடை.. கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்த ஜேர்மனி
பிரித்தானியாவில் ஒமிக்ரான் மாறுபாடு தீவிரமாக பரவிவருவதால் அந்நாட்டிருந்து வரும் பயணிகள் ஜேர்மனிக்குள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜே்மனி சனிக்கிழமை அன்று அதன் உயர் ஆபத்து பட்டியலில் பிரித்தானியாவை சேர்த்தது, மேலும் பிரித்தானியர்கள் நாட்டிற்குள் நுழைய கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்தது.
2021 டிசம்பர் 20 திகதி முதல் அமுலுக்கு வரும் இந்த தற்காலிக தடை 2022 ஜனவரி 3ம் திகதி வரை அமுலில் இருக்கும்.
வடக்கு அயர்லாந்து உட்பட பிரித்தானியாவின் பிரிட்டிஷ் கடல்கடந்த பிரதேசங்கள், Isle of Man மற்றும் சேனல் தீவுகள் ஆகியவை கவலைக்குரிய பகுதியாகும் என்று ராபர்ட் கோச் நிறுவனம் கூறியது.
ஜேர்மனி வரும் பிரித்தானியர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும், தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் தொற்று பாதிப்பலிருந்து மீண்டவர்களுக்கும் இது பொருந்தும்.
கண்டிப்பாக தனிமைப்படுத்தும் நாட்கள் குறைக்கப்படாது என ராபர்ட் கோச் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த வார தொடக்கத்தில் இதேபோன்ற கட்டுப்பாடுகளை பிரித்தானியாவுக்கு பிரான்ஸ் விதித்தது குறிப்பிடத்தக்கது.