ஜேர்மனியில் தாக்குதல் நடத்த திட்டம்: ஹமாஸ் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் கைது
ஜேர்மனியில் யூதர்கள் வாழும் இடங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பேரை ஜேர்மன் அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.
ஜேர்மனியில் மூன்று பேர் கைது
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் ஜேர்மன் அதிகாரிகள் நடத்திய ரெய்டுகளில், ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அதன் தொடர்ச்சியாக, ஜேர்மன் அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில், நெதர்லாந்து நாட்டிலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் லெபனான் மற்றும் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
GETTY IMAGES
தாக்குதல் நடத்த தயார் நிலையில்...
கைது செய்யப்பட்ட நான்குபேரும் நீண்ட காலமாக ஹமாஸ் அமைப்பில் உறுப்பினர்கள் என நம்பப்படுகிறது. ஹமாஸ் அமைப்பின் ஆயுதப்பிரிவின் தலைவருடன் அவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அந்த நான்கு பேரில் ஒருவரான Abdelhamid Al A என்பவருக்கு, லெபனானிலுள்ள ஹமாஸ் தலைவர்கள் ஆயுதக்கிடங்கு ஒன்றின் பொறுப்பைக் கொடுத்துள்ளார்கள்.
அந்த ஆயுதங்களை ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்குக் கொண்டுவந்து, யூத அமைப்புகளுக்கெதிராக தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படும்போது, அவற்றை தாக்குதலில் பயன்படுத்தும் வகையில் தயாராக வைத்திருக்க திட்டமிடப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |