ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மூன்றை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது ஜேர்மனி
ஜேர்மனி, ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மூன்றை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
அவற்றில், பெர்லினுடைய தேவையில் 90 சதவிகித எரிபொருளை வழங்கும் முக்கிய நிறுவனமும் ஒன்றாகும்.
ரஷ்ய எண்ணெய் நிறுவனமான Rosneft என்னும் பிரம்மாண்ட நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் மூன்று இப்போது ஜேர்மனியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜேர்மன் அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுடனான உறவு நன்றாக இருந்த காலகட்டத்தில் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏராளமான கச்சா எண்ணெய் ரஷ்யாவிலிருந்து வந்துகொண்டிருந்தது.
ஆனால், தற்போது ஜேர்மனி ரஷ்ய எண்ணெயை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதால், அது கச்சா எண்ணெய்க்கு மாற்று ஏற்பாடுகளைத்தான் செய்தாகவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
GETTY IMAGES