ஜேர்மனியில் குழந்தைகளுக்கு தவறான தடுப்பூசி போட்டதால் பரபரப்பு!
ஜேர்மனி தடுப்பூசி மையம் ஒன்றில் குழந்தைகளுக்கு தவறுதலாக மாடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தில், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு BioNTech-Pfizer தடுப்பூசி மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஜேர்மனியின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான North Rhine-Westphalia-வில் உள்ள தடுப்பூசி மையத்தில், ஞாயிற்றுக்கிழமையன்று, பல குழந்தைகளுக்கு தவறுதலாக மாடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில், எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை, இருப்பினும் யாருக்கும் இதுவரை பக்க விளைவுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
உள்ளூர் அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர், அவர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி மையத்தின் ஊழியர்களின் இந்த தவறு, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் செயல்முறைகளை இன்னும் உன்னிப்பாகக் கவனிக்கத் தூண்டியுள்ளதாக அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துக் கட்டுப்பாட்டாளரான ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சி (EMA) குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசிகளை செலுத்துவதற்கான ஒப்புதலுக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட அதிகாரிகள் கூறி பக்கவிளைவுகள் குறித்த அச்சத்தைப் போக்க முயன்றனர்.
கடந்த மாதம் 5 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கான பயோஎன்டெக்-ஃபைசர் தடுப்பூசியை EMA அங்கீகரித்தது. அதனைத் தொடர்ந்து ஜேர்மனி இந்த மாதத்திலிருந்து 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியது.
மாடர்னாவின் தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.