ஆப்கானிஸ்தானிலுள்ள தூதரகத்தை மூடிய ஜேர்மனி: அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை
ஜேர்மனியில் இன்னமும் பல ஜேர்மன் வாழிட உரிமம் கொண்டவர்களும், உள்ளூர் அலுவர்களும் சிக்கியிருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானிலுள்ள தனது தூதரகத்தை மூடியதுடன், மீட்புப் பணியையும் முடிவுக்குக்குக் கொண்டு வந்துள்ளது ஜேர்மன் அரசு.
அது வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஆப்கானிஸ்தனிலிருக்கும் ஜேர்மானியர்கள் தங்களைக்குறித்த விவரங்களை ஜேர்மனி குறிப்பிட்டுள்ள சில இணையதளங்களில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
பிறிதொரு நாளில் ஆப்கானிஸ்தானில் சிகியிருப்போரை மீட்பதற்காக விமானங்களை ஏற்பாடு செய்யும் நடவடிக்கைகளில் ஜேர்மன் வெளியுறவு அலுவலகம் ஈடுபட்டுள்ளதாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனி தனது இராணுவ மீட்புப் பணிகளை காபூலில் வெடிகுண்டு வெடிப்பதற்கு முன், வியாழனன்று முடித்துக்கொண்டது.
இந்நிலையில், ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல், ஜேர்மனி தனது கடமை முடியும் வரை ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை வெளியேற்றிகொண்டே இருக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு அமெரிக்காவின் உதவி தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.