ஜேர்மனியில் ஒமிக்ரான் காரணமாக முதல் மரணம்
ஜேர்மனியில் ஒமிக்ரான் மாறுாபடு பாதிப்பால் முதன்முறையாக மரணம் நிகழ்ந்துள்ளது.
ஜேர்மனியில் ஒமிக்ரான் மாறுாபட்டால் முதன்முறையாக மரணம் ஏற்பட்டுள்ளதை மத்திய அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனமாக ராபர்ட் கோச் நிறுவனம் (RKI) உறுதிப்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவிட்டது. ஒமிக்ரான், டெல்டா வைரஸைவிட வேகமாக பரவினாலும் லேசான பாதிப்பையே ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, ஜேர்மனியில் புத்தாண்டு தினத்தன்று கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக நாட்டின் சுகாதார அமைச்சர் Karl Lauterbach தெரிவித்துள்ளார்.
மற்ற ஐரோப்பிய நாடுகளை போல ஜேர்மனியில் தற்போது வரை ஒமிக்ரானின் பெரியளவிலான தொற்று பரவல் ஏற்படவில்லை.
புத்தாண்டு மற்றும் ஜனவரி முதல் வாரத்தில் ஜேர்மனியில் ஒமிக்ரான் பெரியளவில் பரவ வாய்ப்பு இருக்கிறது.
கொரோனாவுக்கு எதிரான சிறந்த நோயெதிர்ப்பு சக்தியைப் தக்கவைக்க மக்களுக்கு நான்காவது தடுப்பூசி டோஸ் தேவைப்படும்.
விடுமுறை காலத்தில் ஜேர்மனியர்கள் தங்கள் தொடர்புகளை குறைத்துக்கொள்ளவும், அவர்கள் ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றிருந்தால், பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற வேண்டும் என சுகாதார அமைச்சர் Karl Lauterbach வலியுறுத்தியுள்ளார்.