விலைவாசியுடன் போராடும் ஜேர்மன் மக்கள்; 65 பில்லியன் யூரோ நிவாரணத் திட்டத்திற்கு அரசு ஒப்புதல்
ஜேர்மன் மக்களுக்கான 65 பில்லியன் யூரோ மதிப்பிலான நிவாரண திட்டம் நடைக்குறைக்கு வரவுள்ளது.
வீட்டிற்கான அடிப்படை நுகர்வுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கான விலையேற்றத்தாய் கட்டுப்படுத்த நடவடிக்கை.
பல தசாப்தங்களாக ஐரோப்பாவின் கடுமையான எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் உயரும் விலைகளுடன் போராடும் மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு உதவ சுமார் 65 பில்லியன் யூரோக்கள் ($65 பில்லியன்) மதிப்பிலான நிவாரணத் திட்டத்திற்கு ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் கூட்டணி அரசு ஒப்புக்கொண்டது.
இதில் முக்கிய நடவடிக்கைகளாக, தற்போதைய நெருக்கடியின் பின்னணியில் எரிசக்தி நிறுவனங்கள் பெற்ற பெரும் லாபத்தை கட்டுப்படுத்துவது; ஓய்வூதியம் பெறுவோர், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் வேலையில்லாதவர்களுக்கு கொடுப்பனவுகளை அதிகரித்தல்; மற்றும் மின்சார விலைகள் உயரும் வேகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அடங்கும்.
இந்த நடவடிக்கைகள் "குடிமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான கணிசமான, பெரிய படியாக இருக்கும்" என்று Scholz பெர்லினில் உள்ள சான்சலரியில் ஒப்பந்தத்தை முன்வைக்க அவர் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மேலும், தற்போதைய நெருக்கடிக்கு "புடின் தான் பொறுப்பு" என்று உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரைக் குறிப்பிட்டு கூறினார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்காக, சர்வதேச சமூகம் ரஷ்யா மீது சுமத்திய கடுமையான தடைகளை அடுத்து Nord Stream 1 குழாய் மூலம் எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்தியது உட்பட பல சர்வதேச சூழல்களால் ஜேர்மனி கடுமையான ஆற்றல் நெருக்கடியை எதிர்கொள்கிறது. இதற்கிடையில், வெள்ளிகிழமையன்று ரஷ்யாவின் Gazprom எண்ணெய் நிறுவனம் மூன்று நாட்கள் பராமரிப்புக்குப் பிறகு திட்டமிட்டபடி பைப்லைனை மறுதொடக்கம் செய்யப்போவதில்லை என்று அறிவித்தது.
இந்நிலையில், ஜேர்மனிய அரசாங்கம் மூன்று-நிலை எரிவாயு அவசரத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் எதிர்வினையாற்றியுள்ளது, மேலும் அதன் பல முக்கிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகளை தளர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறது, இதில் அணுசக்தி மற்றும் நிலக்கரி மின் நிலையங்களின் செயல்பாட்டை நீட்டிப்பதும் அடங்கும்.
நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் வெளியிட்ட 65 பில்லியன் யூரோ திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாக, பொதுப் போக்குவரத்தில் நாடு தழுவிய பயணங்களுக்கு மானிய விலையில் டிக்கெட்டை வழங்குவதாக உறுதியளித்தது. இப்போது பெருமளவில் பிரபலமான 9 யூரோ கோடைகால டிக்கெட் திட்டம் காலாவதியாகிவிட்டது. புதிய பதிப்பின் விலை 49 யூரோ முதல் 69 யூரோக்கள் வரை இருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புதிய தொகுப்பில் உள்ள சில முக்கிய நடவடிக்கைகள்:
- எரிசக்தி நிறுவனங்களுக்கு லாப வரம்புக்கான ஆதரவு.
- அடிப்படை நுகர்வுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கான விலையேற்றத்தில் பிரேக்.
- மின்சாரக் விலையை (electricity grid prices) குறைக்க மானியங்கள்.
- முன்பே திட்டமிடப்பட்ட கார்பன் உமிழ்வு விலை அதிகரிப்புக்கு 2024 வரை தாமதம்.
- ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 300 யூரோக்கள் ஒரு முறை மொத்தமாக செலுத்துதல்.
- பல்கலைக்கழக மாணவர்களுக்கு 200 யூரோக்கள் ஒரு முறை மொத்தமாக செலுத்துதல்.
- வாடகை மானியம் அதிகரிப்பு.
- நலன்புரி கொடுப்பனவுகளில் 500 யூரோக்கள் அதிகரிப்பு.
- குழந்தை நலன் திட்டத்தில் ஒரு குழந்தைக்கு 18 யூரோக்கள் அதிகரிப்பு.
- பணமில்லா நிறுவனங்களை ஆதரிக்க பல்வேறு KfW திட்டத்தின் விரிவாக்கம்.
- மானியத்துடன் கூடிய பொது போக்குவரத்து டிக்கெட்டுகளை வழங்குவதைத் தொடர்வது