ஜேர்மனி புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பிய விவகாரம்: நீதிமன்றம் அதிரடி
ஜேர்மனி, புகலிடக்கோரிக்கையாளர்களை எல்லையிலேயே திருப்பி அனுப்பும் விடயம் சட்டவிரோதமானது என ஜேர்மன் நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பிய விவகாரம்
ஜேர்மனியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான அரசு, புகலிடக்கோரிக்கையாளர்களை எல்லையிலேயே திருப்பி அனுப்புவோம் என்று கூறியிருந்தது.
மே மாதம் 9ஆம் திகதி, சோமாலி நாட்டவர்கள் மூன்று பேர், இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும், போலந்து நாட்டிலிருந்து ரயில் மூலம் ஜேர்மனியை வந்தடைந்தார்கள்.
ஆனால், ஃபெடரல் பொலிசார் அவர்களை ஃப்ராங்பர்ட் ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தினார்கள், தாங்கள் புகலிடம் கோர விரும்புவதாக தெரிவித்தும், அவர்கள் அன்றே திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
நீதிமன்றம் அதிரடி இந்நிலையில், பெர்லின் நிர்வாக நீதிமன்றம், புகலிடக்கோரிக்கையாளர்களை எல்லையிலேயே திருப்பி அனுப்புவது சட்டவிரோதம் என்று கூறியுள்ளது.
ஜேர்மன் எல்லையில் சோதனைக்குட்படுத்தப்படுபவர்கள், புகலிடம் கோர விரும்புவதாக கூறும் நிலையில், டப்ளின் ஒழுங்குமுறையின் கீழ் அவர்களுடைய புகலிடக்கோரிக்கை எந்த நாட்டில் பரிசீலிக்கப்படவேண்டும் என்பது தெரியவரும் வரை, அவர்களை திருப்பி அனுப்பக்கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |