ஜேர்மனியில் பூஸ்டர் டோஸ் போட்டவர்களுக்கு விலக்கு! வெளியான முக்கிய தகவல்
ஜேர்மனியில் கொரோனா வைரசுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்தியவர்களுக்கு சில இடங்களில் கோவிட்19 விதிமுறைகளில் விலக்கு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியில் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு சில ஓய்வு வசதிகளுக்குள் நுழைவதற்கு முன்பு கொரோனா வைரஸ் பரிசோதனையை எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சகழுத்தின் வரைவு ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாயன்று, ஜேர்மனியின் புதிய சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக் (Karl Lauterbach) மற்றும் ஜேர்மனியின் 16 கூட்டாட்சி மாநிலங்களின் அமைச்சர்களால் விவாதிக்கப்படும் இந்த திட்டம், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை பெற மக்களை ஊக்குவிப்பதையும், சோதனை திறனை அகற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இருப்பினும், பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்க உதவுவதற்காக மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு இல்லங்களுக்குள் நுழைவதற்கு எதிர்மறையான சோதனை முடிவை காண்பிக்கப்பட வேண்டும்.
ஜேர்மனியின் மக்கள்தொகையில் 69.9% பேர் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் மற்றும் 23.8% பேர் பூஸ்டர் டோஸை பெற்றுள்ளனர்.
ஜேர்மனியில் தற்போது, இரண்டு ஷாட்கள் எடுத்தவர்கள் அல்லது குணமடைந்தவர்கள், இரவு விடுதிகள் அல்லது டிஸ்கோக்கள் போன்ற நோய்த்தொற்று அபாயம் அதிகம் உள்ள இடங்களுக்குள் நுழைவதற்கு எதிர்மறையான COVID-19 சோதனையைக் காட்ட வேண்டும்.
மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே, ஜேர்மனியும் கொரோனா வைரஸின் நான்காவது அலையைத் தடுக்க போராடி வருகிறது. செவ்வாயன்று சுமார் 473 பேர் COVID-19 பாதிப்பால் இறந்துள்ளனர்.