ஜேர்மனியில் 5 முதல் 11 வயது குழந்தைகள் தொடர்பில் முக்கிய தகவல்!
ஜேர்மனியில் 5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்க அனுமதி வழங்கப்பட்டது.
ஜேர்மனியின் சுயாதீன தடுப்பூசி ஆலோசனைக் குழு இன்று (வியாழக்கிழமை) 5 முதல் 11 வயதுக்குட்பட்ட சுகாதார பிரச்சினைகள் உள்ள குழந்தைகள் அல்லது பாதிக்கப்படக்கூடிய நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் குழந்தைகளுக்கு COVID-19 தடுப்பூசிகளை பரிந்துரைக்கிறது.
அதற்கு மேலாக, "தனிப்பட்ட விருப்பம்" இருந்தால், சுகாதார பிரச்சினைகள் இல்லாத இளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடலாம் என்றும் நிபுணர் குழு கூறியது.
அதாவது குறிப்பிட்ட வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் தடுப்பூசிகளைப் பெற வேண்டும் என்று கட்டாயமாக்கப்படவில்லை.
ஜேர்மனியின் தடுப்பூசிக்கான நிலைக்குழுவான STIKO, 5-11 வயதுடைய குழந்தைகள் Pfizer-BioNTech தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை 3 முதல் 6 வார இடைவெளியில் பெற வேண்டும் என்று ஒரு அறிக்கையில் கூறியது.
இந்த பரிந்துரை, கட்டுப்பாடற்றது மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகும் திருத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 69.3% பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.