ஜேர்மனியில் குப்பைக் கவரில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் எலும்புக்கூடு! தொடரும் மர்மம்...
ஜேர்மனியில் குப்பைக் கவர் ஒன்றில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் இன்னும் மர்மம் தொடருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
ஜேர்மனியின் Saxony மாநிலத்தில், அர்ன்ஸ்டோர்ஃப் நகரத்தில் உள்ள Karlswald பகுதியில் B6 சாலையில் கடந்த செப்டம்பர் மாதம் 26-ஆம் திகதி, அவ்வழியே நடந்து செல்லும் சிலர் பயங்கரமான ஒன்றை கண்டுபிடித்தனர்.
அங்கே ஒரு குப்பைப் பையில் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. வழிப்போக்கர்கள் சிலர் தகவல் கொடுத்ததையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து எலும்புக்கூட்டை ஆய்வுக்கு எடுத்துகிச்சென்றனர்.
அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக இன்னும் சரியான தகவல் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Photo: xcitepress
சாட்சிகள் பலரை விசாரித்த பிறகும், இன்னும் குழந்தையின் தாய் மற்றும் தந்தையை பொலிஸார் தேடி வருகின்றனர்.
தற்போது இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் முறையிட்டுள்ளனர்.
அதே நேரத்தில், காவல்துறை செய்தி தொடர்பாளர் Anja Leuschner (34) கூறுகையில், "புலனாய்வாளர்கள் மருத்துவ மற்றும் உளவியல் ரீதியாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பிலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்" என கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து இந்த வழக்கில் மர்மம் நீடிக்கிறது.