பிரித்தானியாவை வைரஸ் மாறுபாடு பகுதியாக அறிவித்தது ஜேர்மனி! பிரித்தானியார்களுக்கு புதிய கட்டுப்பாடு அறிமுகம்: வெளியான முக்கிய அறிவிப்பு
பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தை வைரஸ் மாறுபாடு பகுதியாக ஜேர்மனி பொது சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா மாறுபாடு பிரித்தானியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் பிரித்தானியாவிலிருந்து ஜேர்மனிக்கு வரும் அனைவரும் இரண்டு வாரங்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
முழுமையாக தடுப்பூசி போட்டவர்களுக்கும், கொரோனா இல்லை என்ற சோதனை முடிவு வைத்திருப்பவர்களுக்கும் மற்றும் தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும் என ஜேர்மனி அறிவித்துள்ளது.
இந்திய மாறுபாட்டை நாம் பாதுகாப்பாக தான் கையாள வேண்டும். தற்போது தடுப்பூசி பிரச்சாரத்தின் முக்கியமான கட்டத்தில், முடிந்தவரை பிரச்சினைக்குரிய மாறுபாடு நாட்டிற்குள் நுழைவதை தவிர்க்க வேண்டும் என ஜேர்மனி அரசு தெரிவித்துள்ளது.