1.3 பில்லியன் யூரோ மதிப்புள்ள புதிய இராணுவ ஆயுதங்கள்! அறிவிப்பை வெளியிட்ட ஜேர்மனி
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு உதவ ஜேர்மனி 1.3 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள இராணுவ உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இராணுவ உதவி
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், இதுவரை 10,000க்கும் மேற்பட்ட உக்ரேனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நேச நாடுகளிடம் போருக்காக உதவி கேட்டு வருகிறார். மேலும் அவர் புடினை கொல்வதற்கான அனைத்து உரிமைகளும் தங்களுக்கு இருப்பதாக கூறிய பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்குவதாக ஜேர்மனி அறிவித்துள்ளது.
Image: Diehl Defence/abaca/picture alliance
ஜேர்மனின் பாதுகாப்பு அமைச்சர்
இதுதொடர்பாக ஜேர்மனின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் (Boris Pistorius) கூறுகையில், 'உக்ரைனுக்கு 1.3 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள மற்றொரு இராணுவ உதவிப் பொதியை (Military aid package) ஜேர்மனி வழங்கும், அதில் நான்கு கூடுதல் IRIS-T வான் பாதுகாப்புப் பிரிவுகளும் அடங்கும்.
ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிரான உங்கள் போராட்டத்தில் இது உங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன். உக்ரைனுடன் நாங்கள் நிலையான மற்றும் நம்பகத்தன்மையுடன் நிற்கிறோம் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது' என தெரிவித்துள்ளார்.
REUTERS/Gleb Garanich
மேலும், இந்த இராணுவப் பொதியில் 20,000 பீரங்கி குண்டுகள் (155mm) மற்றும் டாங்கி எதிர்ப்பு மைன்ஸும் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கீவிற்கு இதுவரை 8 IRIS-T அமைப்புகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது, அவற்றில் மூன்று வழங்கப்பட்டுள்ளன. ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைன் முக்கியமாக அவற்றைப் பயன்படுத்துகிறது.
REUTERS/Gleb Garanich
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |