வெளிநாட்டவர் ஒருவரை நாடுகடத்திய ஜேர்மனி: விவரம் செய்திக்குள்
கிழக்கு ஜேர்மனியிலுள்ள கிறிஸ்துமஸ் சந்தை ஒன்றில் தீவிரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஈராக் நாட்டவர் ஒருவரை ஜேர்மனி நாடுகடத்தியுள்ளது.
பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்
ஜேர்மனியிலுள்ள Saxony-Anhalt மாகாணத்தில் வாழ்ந்துவந்த 20 வயது ஈராக் நாட்டவர் ஒருவர், கிறிஸ்துமஸ் சந்தையில் பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதைத் தொடர்ந்து கடந்த மாதம், அதாவது, நவம்பர் மாதம் 21ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.
நாடுகடத்தல்
ஜேர்மனியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்லது தீவிரவாத அச்சுறுத்தலை தவிர்ப்பதற்காக அவர் நாடுகடத்தப்பட்டதாக மாகாண உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மீண்டும் ஜேர்மனிக்குள் நுழையவும் அவருக்கு நிரந்தரத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக மாகாண உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |