சிறுமிகளை சீரழித்த கணவன்... மேக் அப் போட்டுவிட்ட மனைவி: ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட தம்பதி
ஜேர்மன் சட்டப்படி இனப்படுகொலை என முடிவு செய்யப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஒரு தம்பதி ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சிறுமிகளை சீரழித்த கணவன்... மேக் அப் போட்டுவிட்ட மனைவி
ஈராக் நாட்டவர்களான Twana H.S. மற்றும் Asia R.A. என்னும் தம்பதியர், 2015க்கும் 2017க்கும் இடையில் ஐ எஸ் அமைப்பு யாஸிடிகள் என்னும் சிறுபான்மை இனத்தவரை இனப்படுகொலை செய்த நிலையில், அவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், இனப்படுகொலையில் பங்கேற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்.
Twana, Asia தம்பதியர், யாஸிடி இனத்தவர்களான 5 மற்றும் 12 வயதுள்ள இரண்டு சிறுமிகளை அடிமைகளாக வாங்கியுள்ளார்கள். அந்தக் குழந்தைகள் இருவரையும் Twana தொடர்ந்து வன்புணர்ந்துவந்துளார்.
கணவன் அந்தப் பிள்ளைகளை வன்புணர்வதற்கு வசதியாக, அவருக்கு படுக்கையறையை தயார் செய்து கொடுத்ததுடன், அந்தப் பிள்ளைகளில் ஒரு பிள்ளைக்கு மேக் அப் போட்டு, அவளை கணவனுக்காக தயார் செய்துள்ளார் Asia.
Twana, Asia தம்பதியர், இந்த வாரம் ஜேர்மனியிலுள்ள Regensburg என்னுமிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்கள்.
ஜேர்மன் அதிகாரிகள் அவர்களை காவலில் அடைத்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |