ஜேர்மனியில் அடுத்த ஆண்டும் தொடரும் சலுகை! புதிய அரசாங்கம் அறிவிப்பு
ஜேர்மனியில் மின்சார கார் வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை அடுத்த ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜேர்மனியில் மின்சார மற்றும் கலப்பின கார்களை (Electric and Hybrid cars) வாங்குபவர்களுக்கு முந்தைய அரசாங்க திட்டத்தின்படி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த திட்டம் இந்த ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில், ஜேர்மனியின் புதிய அரசாங்கம் நாட்டின் தற்போதைய ஊக்கத்தொகை செலுத்தும் முறையை அடுத்த ஒரு வருடத்திற்கு (2022 வரை) நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
ஆனால், அதன் பின்னர் வாகனங்களுக்கு ஊக்கத்தொகை பெறுவதற்கு கடுமையான தேவைகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் புதிய அரசாங்கம் கடந்த வாரம் பதவியேற்றபோது அமைக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் காலநிலை அமைச்சகம், 2023-ஆம் ஆண்டு முதல் "சாதகமான காலநிலை-பாதுகாப்பு விளைவைக் கொண்டிருக்கும் மின்சார வாகனங்களுக்கு" மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும்" என கூறியுள்ளது.
அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, மின்சாரத்தின் மூலம் கார்கள் பயணிக்கக்கூடிய குறைந்தபட்ச தூரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிது.
அடுத்த ஆண்டிற்கு, தற்போதைய திட்டம் இன்னும் பொருந்தும், மின்சார கார்களை வாங்குபவர்கள் 9,000 யூரோக்கள் வரை மற்றும் plug-in hybrid கார்களை வாங்குபவர்களுக்கு 6,750 யூரோக்கள் வரை கிடைக்கும்.
புதிய அரசாங்கம் 2030-ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 15 மில்லியன் முழு மின்சார கார்களை சாலையில் பயன்பாட்டிற்கு கோடுநுவர விரும்புகிறது.