ஜேர்மனியில் நிறைவேற்றப்பட்ட கொரோனா திருத்தச் சட்டம்: புதிய இரவு ஊரடங்கு அமுல்
ஜேர்மனி நாட்டின் கொரோனா வைரஸ் சட்டத்தில் ஒரு திருத்தத்தை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து புதிய இரவு ஊரடங்கு உத்தரவை அரசு அமுல்படுத்தியுள்ளது.
ஜேர்மன் அரசாங்கம் ஏற்றுக்கொண்ட கொரோனா தொற்று பாதுகாப்பு சட்டத்தில் இன்று திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் காரணமாக, ஜேர்மனியின் பெரும்பகுதிகள் இப்போது ஒரு புதிய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும். அதன்படி, இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அத்தியாவசியமற்ற கடைகள் மூடப்படும்.
100,000-த்தில் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டால், அப்பகுதிகளிலும் பள்ளிகள் மூடப்படும் என கூறப்பட்டுள்ளது.
Göttingen-ல் உள்ள Leibniz Institute for Primate Research நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் Stefan Pöhlmann மற்றும் Markus Hoffmann ஆகியோர், வைரஸின் புதிய மாறுபாடுகளை சமாளிக்க ஜேர்மனி நாடு முழுவதும் போதுமான நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், தொற்று எண்ணிக்கை உயர்வதை தடுக்க அவசரகால பிரேக் விதிக்க வேண்டும் என்று ஏஞ்சலா மேர்க்கல், 16 மாவட்ட தலைவர்களுடன் ஆலோசித்து இந்த சட்டத்தை அமுல்படுத்த முடிவெடுத்துள்ளனர்.
[AFI46S ]