புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை விரைவாக நாடுகடத்தவேண்டும்: ஜேர்மன் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்
ஜேர்மனியில் வாழ்ந்துவரும் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை விரைவாக நாடுகடத்தவேண்டும் என ஜேர்மன் எதிர்க்கட்சித்தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜேர்மன் எதிர்க்கட்சித்தலைவர் கூறியது என்ன?
ஊடகம் ஒன்றிற்கு ஜேர்மன் எதிர்க்கட்சியான Christian Democrats (CDU) கட்சியின் தலைவரான Friedrich Merz அளித்த பேட்டி ஒன்று, நேற்று வெளியானது.
அந்த பேட்டியில், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்துவதை எளிதாக்கும் வகையில் கொள்கை மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என கூறியுள்ளார் Friedrich.
DW
இந்தியா பெயரும் அடிபட்டது
அவரது பேட்டியின்போது, சில நாடுகளை பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சேர்க்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் Friedrich.
துனிசியா, மொராக்கோ, அல்ஜீரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் பெயர்களை குறிப்பிட்டார் Friedrich. அவர் சொன்னதன் பொருள் என்னவென்றால், இந்த நாடுகளை பாதுகாப்பான நாடுகள் என அறிவித்தால், அந்த நாட்டிலிருந்து புகலிடம் கோரிவந்தவர்களை அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்புவதால் அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்னும் பட்சத்தில், நாடுகடத்திவிடலாம்.
இப்படி ஒரு திட்டத்தை Friedrich முன்வைத்தாலும், அவர் கூறும் நாடுகள் பாதுகாப்பானவை என ஜேர்மன் நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே அவரது திட்டம் செயல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |