ஜேர்மனியில் முதல் முறையாக புதிய உச்சம் தொட்ட தினசரி தொற்று எண்ணிக்கை!
ஜேர்மனியில் முதல் முறையாக தினசரி 100,000-க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த எழுச்சியானது மிகவும் பரவக்கூடிய Omicron மாறுபாட்டால் தூண்டப்படுகிறது. மருத்துவமனைகளின் தாக்கம் முன்பு பயந்த அளவுக்கு மோசமாக இல்லை, ஆனால் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறைக்க வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.
ஜேர்மனியில் புதன்கிழமை 112,323 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுவே ஜெர்மனியில் இதுவரை பதிவாகியுள்ள திகப்பட்ச தினசரி பாதிப்பாகும், அதேபோல் 100,000-க்கு தினசரி பாதிப்புஎண்ணிக்கை பதிவானும் இதுவே முதல்முறை.
ஜேர்மனியின் தேசிய நோய் கட்டுப்பாட்டு அமைப்பான ராபர்ட் கோச் நிறுவனம் (RKI), புதன்கிழமை அதிகாலையில் இது குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டது.
அதன்படி, நாட்டின் வாராந்திர பாதிப்பு விகிதம் இப்போது ஏழு நாட்களில் 100,000 பேருக்கு 584.4 புதிய பாதிப்புகளை எட்டியுள்ளது.
RKI நிறுவனம், கோவிட் உடன் தொடர்புடைய 239 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, இது முந்தைய புதன்கிழமை இறப்பு எண்ணிக்கையை விட மிகவும் குறைந்துள்ளது, கடந்த புதன்கிழமை இறப்பு எண்னிக்கை 384-ஆக இருந்த்தது.
அதேபோல், RKI-ன் படி மருத்துவமனையில் சேர்க்கும் விகிதம் அதிகரித்துள்ளது, ஆனால் மிகக்குறைவான அளவிலேயே உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 100000 பேருக்கு 3.13 பேராக இருந்த நிலையில், இப்போது 100,000 பேருக்கு 3.17 பேராக உயர்ந்துள்ளது.
இந்த வார நிலவரப்படி, ஜேர்மனி முழுவதும் 70% க்கும் அதிகமான புதிய பாதிப்புகள் Omicron வைரஸால் பதிவாகியுள்ளது.
திங்கள்கிழமை இரவு, ஜெர்மனி முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கினர், நாட்டின் கொரோனா வைரஸ் நடவடிக்கைகள் குறித்து மக்கள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர்.