ஜேர்மனியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக வீடு!
ஜேர்மனியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு கிறிஸ்துமஸுக்கு முன்னதாக தற்காலிகமாக சிறிய வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.
அந்த வீடுகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஜேர்மன் அரசாங்கம், ஜூலை மாதம் ஜேர்மனியின் பல பகுதிகளை தாக்கிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 பில்லியன் யூரோ மீட்பு நிதியை அமைத்துள்ளது. மேற்கு மற்றும் தெற்கு ஜேர்மனி வெள்ளத்திற்குப் பிறகு மீண்டும் கட்டமைக்க உதவுவதே இதன் நோக்கம்.
Photo: Reuters
தற்போதைய நிலவரப்படி, தலா 30 சதுர மீட்டர் அளவுள்ள 25 சிறிய வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குளியலறை, படுக்கையறை மற்றும் திறந்த சமையலறை உள்ளது. வீடுகள் படுக்கை துணி, கெட்டில் மற்றும் காபி மேக்கர் ஆகியவற்றுடன் முழுமையாக பொருத்தப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபரான ஃபிரான்சிஸ்கா ஹில்பெரத் () கூறுகையில், தனது சிறிய வீடு தனது கிறிஸ்துமஸ் மரத்திற்கு போதுமானதாக இல்லை, ஆனால் தனக்கென தங்குவதற்கு ஒரு மேற்கூறியுடன் வீடு அமைத்துக்கொடுக்க உதவிய மக்களுக்கு இன்னும் நன்றியுள்ள ஆளாக இருப்பேன், என்று கூறினார்.
Photo: Reuters
மேலும் "இங்கு வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மீண்டும் தனியுரிமையைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், யாரோ ஒருவரின் படுக்கையிலோ அல்லது ஏர்பேட்களிலோ இரவைக் கழிக்கவில்லை என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்" என்று அவர் கூறினார்.
ஜூலை மாதத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட வெள்ளம், முக்கியமாக ஜேர்மனிய மாநிலங்களான Rhineland Palatinate, North Rhine-Westphalia மற்றும் பெல்ஜியத்தின் சில பகுதிகளைத் தாக்கியது. மின்சாரம் அல்லது தகவல் தொடர்பு இல்லாமல் முழு சமூகங்களும் துண்டிக்கப்பட்டன. பலரும் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டனர்.
Photo: Reuters
Photo: Reuters