பிரித்தானியாவை போல நாமும் கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ளவேண்டும்... மற்றொரு நாட்டில் எழுந்துள்ள குரல்
பிரித்தானியாவைப்போல நாமும் ஆறு வாரங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ளவேண்டும் என ஜேர்மனியிலிருந்து ஒரு குரல் ஒலிக்கிறது.
ஜேர்மனியின் தேசிய மருத்துவக் காப்பீட்டு மருத்துவர்கள் கூட்டமைப்பின் தலைவரான Andreas Gassen, பிரித்தானியாவைப்போல, ஜேர்மனியும் அக்டோபர் இறுதியில் கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆகவே, ஆறு வாரங்களில், அதாவது அக்டோபர் 30 அன்று அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டு ஜேர்மனியிலும் பிரித்தானியாவைப்போலவே ஒரு சுதந்திர தினத்தை அரசியல்வாதிகள் அறிவிக்கவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
கொரோனா கட்டுப்பாடுகளிலிருந்து சுதந்திர தினத்தை அறிவித்ததைத் தொடர்ந்து பிரித்தானியாவின் மருத்துவ அமைப்பு ஒன்றும் நிலைகுலைந்து போகவில்லை என்று கூறியுள்ளார் அவர்.
ஆனால், அவர் கூறியதற்கு நாட்டில் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலாவின் chief of staff பொறுப்பிலிருக்கும் Helge Braun, இது நல்ல திட்டம் என தான் கருதவில்லை என்றும், ஏனென்றால், போதுமான தடுப்பூசி பாதுகாப்பு இன்னமும் கிடைக்காத நிலையில், கொரோனாவின் இன்னொரு அலை உருவாக வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.