ஜேர்மனியில் சரக்கு போக்குவரத்தில் ஒரு புதிய அறிமுகம்: எதிர்கால போக்குவரத்து இப்படித்தான் இருக்குமா?
ஜேர்மனியில், எளிதில் வாகனங்கள் செல்ல இயலாத இடங்களுக்கு சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்வதற்காக புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அது ட்ரோன்கள் மூலம் பொருட்களைக் கொண்டு செல்லும் முறையாகும்.
Volocopter என்ற நிறுவனம் இந்த ட்ரோன் சரக்குப் போக்குவரத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
இதற்கு முன்பும் சில நாடுகளில் சிறு சிறு பொருட்களை ட்ரோன்கள் மூலம் கொண்டு செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஜேர்மனியில் சரக்குப் போக்குவரத்தில் ஈடுபட உள்ள ட்ரோன்கள், 200 கிலோகிராம் எடையுள்ள பொருட்களைக் கூட தூக்கிச் செல்லக்கூடியவை. எங்கெல்லாம் மற்ற வாகனங்களில் பொருட்களைக் கொண்டு செல்ல இயலாதோ, அங்கு இந்த ட்ரோன்கள் மூலம் பொருட்களை டெலிவரி செய்யலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும். பெட்டிகள், திரவப்பொருட்கள், இயந்திரங்கள் முதலான எந்த பொருட்களையும் இந்த ட்ரோன்கள் சுமந்து செல்லக்கூடியவை.
Hamburg நகரில் இந்த ட்ரோனின் சோதனை ஓட்டம் நிகழ்த்தப்பட்டது. அந்த சோதனை ஓட்டம் மூன்று நிமிடங்களுக்கு நீடித்தது.
பெர்லின் முதலான ஜேர்மன் நகரங்கள் எதிர்காலத்தில் ட்ரோன்களை வழக்கமான போகுவரத்தில் பயன்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் இந்த ட்ரோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, அது விரைவில் எதிர்கால சரக்குப் போக்குவரத்தின் முக்கிய அம்சமாக மாறிவிடலாம் என்றே தோன்றுகிறது.