ஜேர்மனியில் 2022 தொடக்கத்தில் இது நடக்கும்! பொருளாதார அமைச்சகம் உறுதி
ஜேர்மனியின் பணவீக்க விகிதம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்று அந்நாட்டு பொருளாதார அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் கோவிட்-19 நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு மதிப்பு-கூட்டப்பட்ட வரி (value-added tax) குறைக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட அடிப்படை விளைவு, தற்போது 4.5% பணவீக்க விகிதமாக மாறியுள்ளது.
இந்த பணவீக்கம் 1993-க்குப் பிறகு ஜேர்மனியில் ஏற்பட்ட மிக அதிகமான பணவீக்க விகிதம் ஆகும்.
அதன் தாக்கமாக மூலப்பொருட்களின் விலையில் கூர்மையான உயர்வு மற்றும் எரிபொருளின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
மத்திய வங்கிகளால் பகிரப்பட்ட இந்த தகவல்கள் குறித்து, Deutsche Bank CEO கிறிஸ்டியன் தைவிங் கேள்விக்குள்ளாக்கினார். இந்த நிலைமைக்கு விரைவான எதிர் நடவடிக்கைகள் தேவை என்று அவர் கூறினார்.
விநியோக இடையூறுகள் மேலும் வேரூன்றியிருக்கின்றன என்று பொருளாதார அமைச்சகம் கூறியுள்ளது. அதாவது, ஏற்கெனெவே ஆர்டர்கள் நிலுவையில் இருக்கும் நிலையில், தொழில்துறை நடவடிக்கைகள் வரும் ஆண்டில் குறைவாகவே இருக்கும் என்று கூறுகிறது. இது குறிப்பாக முக்கியமான வாகனத் தொழிலுக்கு பொருந்தும் என்று அமைச்சகம் கூறியது.
கொரோனா வைரஸ் நடவடிக்கைகளை எளிதாக்குவதன் மூலம், தொழில் துறையில் பலவீனங்களை ஈடுசெய்ய முடியும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஒட்டுமொத்தமாக, ஜேர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டின் இறுதி காலாண்டில் சற்று அதிகரிக்க வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜேர்மன் அரசாங்கம் சமீபத்தில் இந்த ஆண்டுக்கான அதன் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 3.5% லிருந்து 2.6% ஆக குறைத்தது. வரும் ஆண்டில், அந்த எண்ணிக்கை 4.1% ஆக உயரும், ஏப்ரல் மாதத்தின் கணிப்பு 3.6% ஆக உயரும் என கூறப்பட்டுள்ளது.