ஜேர்மனியில் கொரோனா வைரஸ் சோதனையில் மோசடி! வெளிச்சத்திற்கு வந்த உண்மை
ஜேர்மனியில் சில கொரோனா வைரஸ் சோதனை மையங்கள் மோசடியில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்தி வருகிறது.
கொரோனா இருக்கிறதா என்று பரிசோதிக்க ஜேர்மனியர்களுக்கு ஒரு வாரத்தில் ஒரு இலவச கொரோனா சோதனை மேற்கொள்ள ஜேர்மனி அரசு அனுமதி அளித்துள்ளது.
ஏனென்றால், மக்கள் கொரோனா இல்லை என்ற சோதனை முடிவுகளைப் பயன்படுத்தி வெளிப்புற உணவகங்களில் சாப்பிட, ஷாப்பிங் செல்ல அல்லது கலாச்சார இடங்களுக்கு செல்லலாம்.
இதனால் ஜேர்மனியில் சமீபத்திய வாரங்களில், நகரங்களில் ஆயிரக்கணக்கான சோதனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சில கொரோனா சோதனை மையங்கள், உண்மையில் மேற்கொண்ட சோதனை எண்ணிக்கைகளை விட அதிகமாக சோதனை மேற்கொண்டதாக மோசடி செய்து அதிகாரிகளிடம் பணம் வசூலிக்கிறார்கள் என பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து இதுகுறித்து ஜேர்மனி அரசு விசாரணை நடத்தி வருகிறது.
தொற்றுநோயைப் பயன்படுத்தி தங்களது பொருளாதாரத்தை வளர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அதற்காக வெட்கப்பட வேண்டும் என ஜேர்மனி சுகாதார அமைச்சர் Jens Spahn ட்விட் செய்துள்ளார்.
நாட்டின் மேற்கு நகரமான Bochum-ல் மோசடி தொடர்பான சில சந்தேக வழக்குகளை வழக்கறிஞர்கள் விசாரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார், ஆனால் பெரும்பாலான கொரோனா சோதனை மையங்கள் சிறப்பான வேலையைச் செய்கிறார்கள் என்று Jens Spahn கூறினார்.