ஆப்கானிஸ்தானுக்கு உதவ நாங்கள் தயார்! பிரபல ஐரோப்பிய நாடு முக்கிய அறிவிப்பு
ஐக்கிய நாடுகள் சபை மூலம் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க ஜேர்மனி தயாராக உள்ளது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் கூறியுள்ளார்.
ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் கூறியதாவது, தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதற்கு ஆப்கானிஸ்தான் மக்களை குறை கூற கூடாது.
ஐக்கிய நாடுகள் சபை மூலம் மனிதாபிமான உதவிகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம், தலிபான்களுடன் நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம்.
தலிபான்களின் நடத்தையைப் பொறுத்து ஜேர்மனியின் மேலதிக நடவடிக்கைகள் இருக்கும்.
காபூலில் உள்ள புதிய அரசாங்கம் தொடர்பான நடவடிக்கைகளை அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து எடுக்க ஜேர்மனி விரும்புகிறது என மாஸ் கூறினார்.
சமீபத்தில், ஆப்கானிஸ்தானில் வேறு எந்த நாடுகளையும் விட அமெரிக்காவுடன் நெருக்கமான தொடர்புகளை நாங்கள்(ஜேர்மனி) கொண்டிருந்தோம்.
ஆப்கானிஸ்தானிலிருந்து எங்கள் குடிமக்கள் மற்றும் உள்ளூர் பணியாளர்களை வெளியேற்றும் போது அளித்த பரஸ்பர ஆதரவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
அடுத்த கட்டத்தில், நாங்கள் ஒருங்கிணைந்த முறையில் தொடர்ந்து செயல்பட விரும்புகிறோம் என மாஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.