ஜேர்மனியில் 'பயங்கரவாத' தாக்குதல்: 2 பேர் காயம்., தாக்குதல்தாரி சுட்டுக்கொலை
ஜேர்மனியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் காயம் அடைந்தனர்.
தாக்குதல் நடத்தியவரை பொலிஸார் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர்.
தெற்கு ஜேர்மனியின் Ansbach நகரத்தில், 30 வயது நபர் தான் வைத்திருந்த கத்தியால் பல வழிப்போக்கர்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை மாலை, நியூரம்பெர்க்கிற்கு அருகில் உள்ள பவேரிய நகரமான அன்ஸ்பாக்கில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகில் நடந்த இந்த சம்பவத்தில், தாக்குதல்தாரி இரண்டு பேரை கத்தியால் குத்தி கடுமையாக காயப்படுத்தினார்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் அவரை கட்டுப்படுத்த முயன்றபோது, அவர் பொலிஸாரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதனால் பொலிஸார் வேறு வழியின்றி அவரை துப்பாக்கியால் சுட்டனர்.
கடுமையாக காயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பொதுமக்கள் இரண்டு பேர் காயமடைந்தனர், ஆனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தாக்குததாரி 'அல்லாஹு அக்பர்' என்று பல முறை கூச்சலிட்டதகாவும், இந்த சம்பவத்தில் "இஸ்லாமிய அல்லது பயங்கரவாத சூழலுடன் தொடர்பு உள்ளதா" என்று விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.