Omicron-ஐ பற்றி கவலைப்படாத ஜேர்மானியர்கள்! வெளியான கருத்துக்கணிப்பு
ஜேர்மனியில் Omicron மாறுபாடு பற்றிய கவலை குறைந்துள்ளதாக ஒரு புதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் COVID-19 பரவலைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் கடுமையான விதிகளை பெரும்பான்மையான மக்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், Omicron மாறுபாட்டைப் பற்றி குறைவாக கவலைப்படுகிறார்கள் என்று ஒரு புதிய தேசிய கணக்கெடுப்பு வியாழக்கிழமை வெளியானது.
பொது ஒளிபரப்பாளர் ARD-யால் வெளியிடப்பட்ட சமீபத்திய 'Deutschlandtrend' கணக்கெடுப்பு, ஜனவரி 3 முதல் ஜனவரி 5 வரை 1,300 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
ஜேர்மனியில் தொற்றுநோய் அதிகரிப்புக்கு மத்தியில் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ஆட்சியமைத்த ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த பிரதிநிதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தனிமைப்படுத்தலுக்கான காலத்தை குறைக்க வேண்டுமா என்பது உட்பட புதிய தொற்றுநோய் விதிகளைப் பற்றி விவாதிக்க கூட்டாட்சி மற்றும் மாநிலத் தலைவர்களுக்கு இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் கூட்டத்திற்கு முன்னதாக இந்த கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
தொற்றுநோயைப் பற்றி ஜேர்மானியர்கள் எப்படி உணருகிறார்கள்?
Omicron மற்றும் பிற கொரோனா வைரஸ் வகைகளின் மீதான கவலையில் கணிசமான வீழ்ச்சியை கணக்கெடுப்பு பதிவு செய்தது.
கருத்துக்கணிப்பில் பெரும்பான்மையான மக்கள் (51%) புதிய மாறுபாடுகள் 'மிக அதிகமாகவோ' அல்லது 'அதிகமாகவோ' கவலை அளிப்பதாக கூறியுள்ளனர். இது டிசம்பர் தொடக்கத்தில் கிடைத்த பதில்களுடன் ஒப்பிடும்போது அந்த எண்ணிக்கை 9 சதவீதம் குறைந்துள்ளது.
டிசம்பரில் 60 சதவீதம் மக்கள் தொற்று நோயின் மாறுபாடுகள் குறித்து அதிக கவலை அளிப்பதாக கூறியிருந்தனர்.
இதன் மூலம் மக்களிடம் புதிய மாறுபாடுகள் குறித்த கவலை குறிந்துவருவதைக் காணலாம்.
அதேபோல், ஜேர்மனியின் புதிய அரசாங்கம் பதவியேற்ற பிறகு விதிக்கப்பட்ட கடுமையான தடைகளுக்கு நேர்மறையான பதிலையும் இந்த கருத்துக்கணிப்பு காட்டியது .
கணக்கெடுக்கப்பட்டவர்களில் சுமார் 42% பேர், COVID-19 பரவுவதைத் தடுப்பதற்கான தற்போதைய நடவடிக்கைகள் "பொருத்தமானவை" என்று தாங்கள் கருதுவதாகக் கூறினர். இது டிசம்பர் தொடக்கத்தில் கிடைத்த ஆதரவுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 22 புள்ளிகள் அதிகம்.
COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்பவர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கான தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நேரத்தை குறைக்க 67% மக்கள் ஆதரவாக இருப்பதாக கருத்துக் கணிப்பு காட்டுகிறது.
தற்போது, COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்தவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். Omicron மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நபர்களின் நெருங்கிய தொடர்புகளாகக் கருதப்படும் நபர்கள் தடுப்பூசி நிலையைப் பொருட்படுத்தாமல் 14 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்த வேண்டும்.
இந்த நாட்களை குறிக்கவவே 67% மக்கள் ஆதரவாக இருப்பதாக கருத்துக் கணிப்பு காட்டுகிறது.