இரு நாடுகளிடையே உறவை ஏற்படுத்த இதையெல்லாம் செய்ய வேண்டும்! தலிபான்களுக்கு ஜேர்மனி விதித்துள்ள நிபந்தனைகள்
ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்துள்ள புதிய அரசாங்கத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என தலிபான் வலியுறுத்தி வருவதற்கு மத்தியில், ஜேர்மனி தனது நிபந்தனைகளை பட்டியலிட்டுள்ளது.
இரு நாடுகளிடையே உறவை ஏற்படுத்த தலிபான் அரசு நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளை ஜேர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் Heiko Maas பட்டியலிட்டுள்ளார்.
இந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதை பொறுத்தே தலிபான்களுடனான மேலதிக பேச்சுவார்த்தை இருக்கும் என Heiko Maas திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தலிபான்களுக்கு நாங்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள் மனித உரிமையைப் பேண வேண்டும், பெண்கள் உரிமையைப் பாதுகாக்க வேண்டும், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.
பயங்கரவாதக் குழுக்களிடமிருந்து தலிபான்கள் வெளிப்படையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றி தங்களைத் தூர விலக்கிக் கொள்கிறார்கள், இறுதியாக இனிமையான வார்த்தைகளுடன் கடினமான உண்மைகளும் உள்ளன என Heiko Maas கூறியுள்ளார்.