ஜேர்மனி நிலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
ஜேர்மனி தனது கொரோனா வைரஸ் ஆபத்து அளவை மிக தீவிரத்திலிருந்து தீவிரமாக குறைத்துள்ளது.
ஜேர்மனியில் நிலைமை மேம்படுவதால் தொற்று நோய்க்கான ஜேர்மனியின் ராபார்ட் கோச் நிறுவனம் (RKI) நாட்டிற்கான கொரோனா வைரஸ் ஆபத்து அளவை மிக தீவிரத்திலிருந்து தீவிரத்திற்கு குறைத்துள்ளது என சுகாதார அமைச்சர் Jens Spahn தெரிவித்துள்ளார்.
ஆறு மாதங்களில் முதல் முறையாக ராபார்ட் கோச் நிறுவனம், நாட்டிற்கான கொரோனா வைரஸ் ஆபத்து அளவை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனியில் நிலைமை மேம்பட்டு வருவதாகக் கூறியா RKI தலைவர் லோதர் வீலர், ஆனால், கொரோனா இன்னமும் முடியவில்லை என குறிப்பிட்டார்.
அதேபோல், நாட்டின் நிலை மேம்பட்டாலும், ஜேர்மனி இன்னும் தொற்றுநோயின் பிடியில் தான் இருக்கிறது என சுகாதார அமைச்சர் Jens Spahn எச்சரித்துள்ளார்.
மேலும், தடுப்பூசி போட விரும்புபவர்களில் 90% பேர் ஜூலை மாதம் நடுப்பகுதிக்குள் முதல் டோஸை போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் Jens Spahn கூறினார்.